பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எழுதிய ‘மன் கீ பாத் -மனதின் குரலுக்கு ஓர் இந்தியக் குடிமகனின் 108 கேள்விகள்’ எனும் புத்தகம் ஞாயிறன்று நாகர்கோவிலில் வெளியிடப்பட்டது. மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் வெளியிட்டனர். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.வி.பெல்லாமிர்ன், மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.