tamilnadu

img

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்

சென்னை,ஜூலை 28-  திருநெல்வேலி மாவட்டம், அம்பா சமுத்திரம் வட்டம், களக்காடு முண்டந் துறை புலிகள் சரணாலய பகுதிக்குட் பட்ட மாஞ்சோலை பிபிடிசி ( BBTC) தேயிலை நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிவுற்றதால், அங்கு பணிபுரிந்த தொழி லாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து  உதவிகளையும் செய்து தர தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள் ளார்.  அதன்படி, தொழிலாளர்களின் அடிப் படைத் தேவைகள் மற்றும் வாழ்வாதாரத் திற்கான அனைத்து உதவிகளும் அரசால் செய்யப்படும் என்று தமிழக நிதி- மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  தெரிவித்துள்ளார்.

தேயிலைத் தோட்டத் தொழிலா ளர்கள், பல்வேறு அரசியல் கட்சி மற்றும் பொதுநல இயக்கங்களைச் சார்ந்த பிரதி நிதிகளின் கோரிக்கைகளின் அடிப்படை யில் பணியிழந்த தொழிலாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் வீடுகள், வாழ்வா தாரத்திற்கான உதவிகள் உள்ளிட்ட வற்றை வழங்கிட முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார் . 

தொழிலாளர்களுக்கு வாழ்வாதார வசதிகள் வழங்கும் பொருட்டு  சிறப்புக் குழுவால் விவரங்கள் சேகரிக்கப்பட்ட தில், 389 குடும்பங்களைச் சார்ந்த 418 தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங் கள் பெறப்பட்டுள்ளன. அதில், 266 நபர்கள் திருநெல்வேலி மாவட்டத்தி லும், 76 நபர்கள் தென்காசி மாவட்டத்தி லும், 49 நபர்கள் தூத்துக்குடி மாவட்டத் திலும், 18 நபர்கள் தமிழகத்தின் பிற மாவட் டங்களிலும், 9 நபர்கள் பிற மாநிலங்களி லும் குடியேற விரும்புவதாகத் தெரி வித்துள்ளனர். அவர்களின் விண்ணப் பங்களைப் பெற்று அதற்கான அனைத்து  உதவிகளையும் செய்திட உத்தரவிடப் பட்டுள்ளது.

இந்நேர்வில், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் மாஞ்சோலை தொழிலாளர்களின் பல்வேறு கோ ரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சி யர் மூலம் பெறப்பட்ட அறிக்கைகள், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை விரிவாகப் பரிசீலித்து, அவர்களுக்கு அரசின் சில விதிகளை தளர்வு செய்து பல்வேறு உதவிகளை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, அவர்களுக்கு பின்வரும் உதவிகளை வழங்கிட உத்தரவு வழங் கப்பட்டு, அதனடிப்படையில் நீதிமன்றத் திலும் அவை மாவட்ட ஆட்சியரால் அறிக் கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கிராமப் பகுதிகளில் குடியேற விரும்பும் வீடற்ற தொழிலாளர்களுக்கு தற்போதைய அரசு விதிமுறைகளைத் தளர்வு செய்து சிறப்பினமாகக் கருதி அவர்களின் விருப்பத்தின் பேரில் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தால் கட்டப்பட்டு தயார் நிலையி லுள்ள அம்பாசமுத்திரம் வட்டம், பாப்பாங்குளம் கிராமத்தில் 240 அடுக்கு மாடிவீடுகள் மற்றும் திருநெல்வேலி மாநகரம், ரெட்டியார்பட்டி பகுதியில் பணி முடிவடையும் நிலையிலுள்ள அடுக்குமாடி வீடுகள் ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் விருப்ப முள்ள, ஏற்கனவே வீடு இல்லாத மாஞ் சோலை தொழிலாளர்களுக்கு விலை யின்றி ஒதுக்கீடு செய்யப்படும்.

தொழிலாளர்களில், 55 வயதிற்குட் பட்ட பட்டியல் இனத்தைச் சார்ந்த வாழ்வா தார வசதி தேவைப்படும் தொழிலாளர்க ளுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் (AABCS) புதிய தொழில் தொடங்க 35 சதவீத மானியம் மற்றும் 6 சதவீத வட்டிச் சலுகையுடன் சுய தொழில் தொடங்க கடன் வழங்கப்படும்.

இதர பிரிவுகளைச் சார்ந்த தொழிலா ளர்களுக்கு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் (NEEDS) கீழ் 25 சதவீத மானியம் மற்றும் 3 சதவீத வட்டி சலு கையுடன் அதிகபட்சமாக ரூ.75 இலட்சம்  வரை சுயதொழில் தொடங்க கடன் வழங்கப்படும்.

தகுதியுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மையம் மூலம் திறன் பயிற்சி வழங்கப்படும்.

திறன் பயிற்சி முடிப்பவர்களுக்கு தனியார் துறையில் உரிய வேலைவாய்ப்புப் பெற்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

சிறிய பால் பண்ணைகள் அமைத்தல், கறவை மாடுகள், ஆடுகள் வாங்குதல் ஆகியவற்றிற்காக ஆவின் நிறுவனம் மற்றும் கூட்டுறவுத் துறை மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.

பெண்களுக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ரூ.1.50 இலட்சம் வரை சிறு கடன்கள் வழங்கப்படும். பள்ளி களில் படிக்கும் மாணவர்களின் கல்வி  பாதிக்காத வகையில் அவர்கள் விரும் பம் அரசுப் பள்ளியில் அவர்களைச் சேர்க்கவும், அரசு விடுதிகளில் முன்னு ரிமை அடிப்படையில் சேர்க்கவும் நட வடிக்கை எடுக்கப்படும்.

தொழிலாளர்கள் குடியேற விரும்பும் முகவரிக்கு அவர்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை சிறப்பு முகாம்கள் மூலம் சிரமமின்றி மாற்றம் செய்து தரப்படும்.

தொழிலாளர்களுக்கு நிறுவனம் வழங்க வேண்டிய மீதமுள்ள 75 சதவீத கருணைத் தொகை நீதிமன்ற உத்தரவுபடி வழங்கிடவும், அவர்களுக்கு விதிப்படி வழங்கப்பட வேண்டிய மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ பலன்களும் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்திட தொழி லாளர் நலத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சரின்  உத்தர வுபடி, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளை யும், அவர்களுக்கான குடியிருப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதா ரத்திற்கான அனைத்து நடவடிக்கைகளை யும் அரசு மேற்கொள்ளும் என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.