tamilnadu

img

மாதர் சங்கம் நடத்திய போராட்டம் வெற்றி ஆல் இந்தியா ரேடியோ நகரில் பொதுக்கழிப்பிடம் கட்டும் பணி துவக்கம்

சென்னை,செப்.23- சென்னை எர்ணாவூரில் உள்ள ஆல் இந்தியா ரேடியோ நகரில் பொதுக் கழிப்பிடம் கேட்டு மாதர் சங்கம் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூரில் உள்ளது ஆல் இந்தியா ரேடியோ  நகர். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆனால் இப்பகுதி யில் பொதுக் கழிப்பிட வசதி இல்லாததால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில்  பகுதிவாசிகள் கடற்கரை அல்லது இருப்புப் பாதைக ளில் காலைக் கடனை முடிக்கின்றனர்.  மேலும்,  பெண்களை சிலர் பாலியல் சீண்டல் செய்வது போன்ற சம்பவங்களும் நடைபெறு கிறது. இதனை கண்டித்து மாதர் சங்கம் ஏ.ஐ.ஆர் கிளை சார்பில் பல கட்டப்போரா ட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் திங்க ளன்று காலை பொதுக் கழிப்பறை கட்டுவதற்கான பணிகள் துவங்கியது. அப்போது சிலர் கட்டு மான பணியை நிறுத்த முயற்சித்தனர்.  இதனை அறிந்த மாதர் சங்க வட சென்னை மாவட்டச் செயலா ளர் பாக்கியம் உள்ளிட்ட அப்பகுதி பெண்கள்  சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சனையில் ஈடுபட்ட வர்களை அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் கழிப்பிட கட்டுமானப்பணி துவங்கியது. மாதர் சங்கம் ஆல் இந்தியா ரேடியோ கிளை யின் இம்முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.