மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டம்
விழுப்புரம், அக்.14- பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் திரு வெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்தி ருக்கும் போராட்டத்திற்கு நிர்வாகி தண்ட பாணி தலைமை தாங்கினார், போராட்ட த்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார், ஏராளமானோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர், தொடர்ந்து வட்டாட்சியர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார். இதேபோன்று செஞ்சியில் வட்ட தலை வர் முனுசாமி தலைமையில் மாநில துணைத்தலைவர் வி.ராதாகிருஷ்ணனும், விக்கிரவாண்டியில் வட்ட தலைவர் அய்யனார் தலைமையில் மாவட்டப் பொருளாளர் ஜி.ஜெயக்குமார், மாவட்ட துணைத் தலைவர் பி.அய்யனார், மேல்மலையனூரில் வட்ட தலைவர் குமார் தலைமையில் மாவட்ட துணைச்செயலாளர் எம்.முத்துவேல் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
