tamilnadu

img

கவலைக்குரிய மாநிலமானது தமிழகம்

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் கவலைக்குரிய மாநிலங்கள் பட்டியல் தமிழகம் இடம் பெற்றுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கெரோனாவின் உருமாறிய வடிமான ஒமைக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 1.94 லட்சம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் லவ் அகர்வால் கூறியதாவது:
இந்தியாவில் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நாட்டில் 9,55,319 பேர் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  உலகம் முழுவதும் 159 நாடுகளில் கொரோனா அதிகரித்துள்ளது. ஐரோப்பாவின் 8 நாடுகளில் கடந்த இரண்டு வாரத்தில் இரு மடங்கு அதிகமான பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கவலைக்குரிய மாநிலங்களாக மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தில்லி, தமிழகம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், கேரளம் மற்றும் குஜராத் உள்ளன.
உலகம் முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் 115 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 4,868 பேரில் ஒருவர் மட்டுமே பலியாகியுள்ளனர்.
நோய்த் தொற்றின் உறுதியாகும் விகிதமானது மகாராஷ்டிரத்தில் 22.39%, மேற்கு வங்கத்தில் 32.18%, தில்லியில் 23.1% மற்றும் உ.பி.யில் 4.47% ஆக உள்ளன.
தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், கனடா, டென்மார்க் நாடுகளின் தரவுகள்படி டெல்டாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை காட்டிலும் ஒமைக்ரானால் அனுமதிக்கப்படுவது குறைவாகத் தான் இருக்கும். பிரதமருடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு குணமடைந்தோர் வீடுகளுக்கு திரும்பும் கொள்கையில் மாற்றம் செய்துள்ளோம். ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுவோர் 93 சதவீதத்தை அடைந்தவுடன் மூன்று நாள்களுக்கு பிறகு வீட்டிற்கு செல்லலாம். லேசான அறிகுறிகளுடன் சிசிச்சை பெறுவோர் தொற்று உறுதி செய்யப்பட்டு 7வது நாள் வீடு திரும்பலாம் என்றார்.