நவம்பர் புரட்சி தினத்தையொட்டி தி.நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் கட்சிக் கொடியை மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு ஏற்றிவைத்தார். மாநிலத் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் எழுதிய, இஸ்ரேல் – ஹமாஸ் ‘போரும், விடுதலையும்’, நூலை மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட, எம்.எச்.ஜவாஹிருல்லா, வி.பினாய் விஸ்வம் எம்.பி. ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நா.பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.