சென்னை,பிப்.11- முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிறுத்தம் ஏப்ரல் மாதத்திற்குள் பயன் பாட்டிற்கு வரும் என அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு பேருந்து நிலை யத்தில் இருந்து தென் மாவட்டங் களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம் பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயங்கத் தொடங்கியது முதல் தொடர்ந்து பிரச்சனைகள் நீடித்து வரு கிறது.
வடசென்னை மாவட்ட பயணிகள் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட சில ஊர்களுக்கு செல்லும் 160 பேருந்து கள் மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படு கின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து முனை யத்தில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு ஊர்களுக்கு இரவு நேரத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று மறிய லில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் ஞாயிற்று க்கிழமையும் (பிப்.11) கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில், கிளாம்பாக்கம் பேருந்து நிலை யத்தில் பயணிகள் தேவைகளை படிப்படியாக நிறைவேற்றி வரு கிறோம். முடிச்சூரில் ஆம்னி பேருந்து களை நிறுத்த 5 ஏக்கரில் 300 பேருந்து கள் மற்றும் 300 ஊழியர்கள் தங்கும் வகையில் பேருந்து நிறுத்தம் கட்டப் பட்டு வருகிறது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தியுள்ளோம். புதிய ஆம்னி பேருந்து நிறுத்தம் ஏப்ரல் மாதத்திற் குள் பயன்பாட்டிற்கு வரும்” என்றனர்.
திட்டமிட்டு வதந்தி: எஸ்.எஸ்.சிவசங்கர்
அமைச்சர் சிவசங்கர் கூறுகை யில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலை யத்திலிருந்து வழக்கமான பேருந்து கள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகள் போதிய அளவு இயக்கப் படவில்லை என்று சிலர் திட்டமிட்டு வேண்டும் என்ற உண்மைக்கு மாறாக, வதந்தி பரப்புகிறார்கள்” என்றார்.
கோயம்பேடு பேருந்து நிலை யத்தில் இயங்கிய 100 விழுக்காடு பேருந்துகளில் 80 விழுக்காடு கிளாம் பாக்கத்தில், 20 விழுக்காடு மாத வரத்தில் இருந்தும் இயக்கப் படுகிறது.
கோயம்பேடு பேருந்து நிலை யத்தில் நள்ளிரவு நேரத்தில் எப்போதுமே குறைந்த அளவுதான் பேருந்துகள் இயக்கப்படும். கிளாம் பாக்கத்தில் அப்படிதான் பேருந்து கள் இயக்கப்படுகிறது என்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்வ தாக கூறி ஆம்னி பேருந்து உரிமை யாளர்கள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.