tamilnadu

img

மோடி அரசு வீழ்ந்தால்தான் முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எம்.ராமகிருஷ்ணன் பேச்சு

சென்னை, ஏப்.13-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர்.கலாநிதி வீராசாமியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவொற்றியூர் பகுதி தாங்கல் பீர்பைல்வான் தர்கா சாலையில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. வி.அம்சாபாய் தலைமை தாங்கினார். ஜி.வேலுமணி வரவேற்றார். சிபிஎம் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், சி.எம்.நவராஜ், குருபாதம், திமுக 14வது கிழக்கு வட்டச்செயலாளர் இ.கார்த்திகேயன், அவைத் தலைவர் சண்முகம், அம்பேத்கர் தேசிய காங்கிரஸ் மாவட்டச்செயலாளர் டாக்டர்.கே.அப்துல்அஜிஸ், ஏ.டி.அப்துல்லா (மதிமுக), கலியலூல் ரகுமான் (முஸ்லீம்லீக்), அப்துல்சமது, உசேன்அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் பேசுகையில், “வேளாண் கல்லூரி மாணவிகள் 3 பேர் எரித்து கொலைசெய்யப்பட்ட வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் உட்பட தமிழ்நாட்டில்எம்ஜிஆர் நூற்றாண்டையொட்டி 1500 கைதிகளைநல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் விசாரணைக்கைதியாக கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாகசிறை வைக்கப்பட்ட 63அப்பாவி முஸ்லீம் சிறைவாசிகள் விடுவிக்கப்படவில்லை. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்தியாமுழுவதும் உள்ள அப்பாவிமுஸ்லீம் மக்கள் விடுவிக்கப்படுவார்கள். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 124ஏ பிரிவு அகற்றப்படும்.” என்றார்.

;