tamilnadu

சிபிஎம் போராட்டத்தால் பழங்குடி மக்களுக்கு வீடுகள் செங்கொடி நகரில் உ. வாசுகி திறந்து வைத்தார்

சிபிஎம்  போராட்டத்தால் பழங்குடி மக்களுக்கு வீடுகள் செங்கொடி நகரில் உ. வாசுகி திறந்து வைத்தார்

சிதம்பரம், ஜூன் 23- சிதம்பரம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தால் கிடைத்த நிலத்தில் பழங்குடி மக்களுக்கு புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளது.  அந்த வீடுகளை கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ.வாசுகி திறந்து வைத்து இதற்காக போராடிய அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரி வித்தார். சிதம்பரம் அருகே கொத்தட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடியின மக்கள் 11 குடும்பங்கள்  வசித்து வருகின்றனர்.  இவர்கள் அனைவருக்கும்  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.   ஆனால் இவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை குடியேற விடாமல் அப்பகுதி யில் உள்ள ஆதிக்க சக்தி கள் இவர்களுக்கு வழங்கிய இடத்தை ஆக்கிரமித்து பயிர் செய்து வந்தனர்.  இவர்க ளுக்கு  வழங்கப்பட்ட இடத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று பல முறை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இந்நிலையில்  இட த்தினை மீட்டுக் கொடுக்க வேண்டும் என பரங்கிப் பேட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் பழங்குடி மக்கள் கோரிக்கை வைத்த னர்.  இதனை தொடர்ந்து அப்போதைய ஒன்றிய செயலாளராக பணி யாற்றிய எஸ்.ஜி.ரமேஷ் பாபு தலைமையில் கட்சி யினர் ஒன்றிணைந்து பழங்குடி மக்களுக்காக வழங்கப்பட்ட இடத்தை மீட்க பல கட்ட போராட்ட ங்களை நடத்தினார்கள். போராட்டத்தின் விளைவாக ஆக்கிர மிப்பாளர்களிடம் இருந்த பழங்குடி மக்களின் இடத்தை அரசு கைப்பற்றி ஒப்படைத்தது.  பின்னர் அந்த இடத்திற்கு செங்கொடி நகர் என பெயர் வைத்த னர்.  இதனை தொடர்ந்து  அவர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்தது.  அதனை ஏற்று முதல் கட்டமாக ஊரக வளர்ச்சி துறை சார்பில் சிறப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும்  4 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் 4 வீடு கள் கட்டப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் வீடுகளின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இவ்விழா விற்கு கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு புதிய வீடுகளை வீட்டின் பயனாளி அம்மனியுடன் இணைந்து திறந்து வைத்து,  குத்து விளக்கு ஏற்றி அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.