tamilnadu

img

நீதிபதியானாலும் குற்றம் குற்றமே சென்னையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை, மே 14 -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை வெளிப்படைத் தன்மையுடன் கூடிய மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்வலியுறுத்தி உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு நீதி வழங்கக் கோரி மாதர் சங்கம் சார்பில் செவ்வாயனறு (மே 14) வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர்எஸ்.வாலண்டினா பேசியது வருமாறு:பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண் தலைமை நீதிபதி மீது புகார் கூறியவுடன் பல்வேறு வகையான பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினரும் பழிவாங்கலுக்கு உள்ளாகி உள்ளனர்.இந்த புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக்குழு சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல், அதிர்ச்சி தரத்தக்க வகையில் நடந்து கொண்டுள்ளது. புகார் கூறியவர்களின் உறவினர்களை அழைத்துச் சென்று நீதிபதியின் மனைவிகாலை நக்க வைத்துள்ளனர். மத்திய அரசும், சட்டத்துறையும் இந்த விவகாரத்தில் பலவீனமாக செயல்பட்டுள்ளது.தமிழகத்தில் கூட பல நீதிபதிகள் வீடுகளில் பணியாற்றும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். எனவே, பாலியல் புகார் மீது நேர்மையான, நியாயமான, வெளிப்படைத் தன்மையோடு மறு விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணச்செல்வி தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் எஸ்.ராணி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் வி.தனலட்சுமி, பொருளாளர் சித்ரகலா, வடசென்னை மாவட்டச் செயலாளர் பாக்கியலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.