tamilnadu

img

மார்க்சிய இயக்கத்தின் அறிவார்ந்த ஆளுமை தோழர் இ.எம்.ஜோசப் காலமானார்

சென்னை, ஜூன் 30- இன்சூரன்ஸ் ஊழியர் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் இ.எம்.ஜோசப் மதுரையில் ஜுன் 30 ஞாயிறன்று காலை காலமானார். அவருக்கு வயது 75.  உடல்நலக்குறைவு காரணமாக இரண்டு தினங்களுக்கு முன் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த இ.எம்.ஜோசப் சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று காலை 8.30 மணியளவில் காலமானார். அவ ருக்கு மேரி மைக்கேல் ரோஸ் என்ற  மனைவியும் ஆனி கோல்டு நிர்மலா, ஜோஸ்பின் ஜெசிந்தா ராணி, மார்ட்டின் ரத்தின ஷர்மிளா என்ற மூன்று மகள்களும் உள்ளனர். 

கே.பாலகிருஷ்ணன் இரங்கல்
அவரது மறைவுச் செய்தியறிந்து கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த  அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள் ளது. தமிழகத்தின் தலைசிறந்த மார்க்சிய பொருளாதார அறிஞர்களில் ஒருவரான தோழர் இ.எம்.ஜோசப் அவர்களது மறைவு கட்சிக்கு பேரிழப்பு என்றும் கூறியுள்ளது.  தோழர் இ.எம்.ஜோசப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி வருமாறு: மதுரையில் ஜூன் 30 ஞாயிறன்று காலை 8.30 மணியளவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர்களில் ஒருவரான தோழர் இ.எம். ஜோசப் காலமானார் என்ற செய்தி  அதிர்ச்சியையும் ஆழ்த்த வருத்தத்தை யும் அளிக்கிறது. தோழர் ஜோசப், தொழிற்சங்க இயக்கம், கட்சிப் பணி, எழுத்துப்பணி என மூன்று துறைகளில் முத்திரை பதித்தவர். 1967ல் துவங்கி சுமார் 50 ஆண்டு காலம் பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரரான அவர், 35 ஆண்டுகளுக்கு மேலாக இன்சூரன்ஸ் ஊழியர் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவராக செயல்பட்டவர். மதுரை கோட்ட இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் பொறுப்பில் துவங்கி பொதுச் செயலாளர், தலைவர், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் அசாத்தியமான உழைப்பினைச் செலுத்தி, இன்சூரன்ஸ் ஊழியர் இயக்கத்தை வலுமிக்கதாக மாற்று வதில் முன்னணியில் நின்றவர்.  நவீன தாராளமயக் கொள்கைகள் மிகப்பெரும் சூறாவளியாய் இன்சூ ரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறைகளை தாக்கத் துவங்கிய போது, அதற்கு  எதிராக ஒட்டு மொத்த ஊழியர்களை யும் அணிதிரட்டி எண்ணற்ற போராட்டங்களுக்கு தலைமையேற்று, எல்ஐசி நிறுவனத்தை பாதுகாப்பதில் முன்னின்றவர். இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நடுத்தர வர்க்க ஊழியர்கள் மத்தியிலும்  மக்கள் மத்தியிலும் நவீன தாராளமயத் திற்கெதிரான கருத்தியல் தளத்தை உருவாக்குவதில் இடைவிடாமல் செயல்பட்டவர். இத்துடன் குறிப்பிடப்  பட வேண்டிய அவரது மிக முக்கிய மான பங்களிப்பு, சமூக ஒடுக்குமுறை களுக்கெதிரான போராட்ட உணர்வை  தொழிற்சங்க அரங்கில் உருவாக்கி யதும், அதை செயல்படுத்திக் காட்டி யதும்தான். இன்றளவும் இன்சூரன்ஸ் ஊழியர் தொழிற்சங்க இயக்கம் அந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தொழிற்சங்க இயக்கத்தில் மகளிர் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உரத்துப் பேசிய தோடு மட்டுமல்ல, இந்தியாவிலேயே முதல்முதலாக மதுரை கோட்ட காப்பீட்டு ஊழியர் அரங்கத்தில் மகளிர் துணைக்குழு மாநாட்டை நடத்தியவர் தோழர் ஜோசப்.  தொழிற்சங்க இயக்கப் பணி களோடு நில்லாமல், மதுரை மாநகரில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் எளிய தொழிலாளர்களின் அன்பைப் பெற்றவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பற்றுறுதி மிக்க ஊழியராக தனது இறுதி மூச்சு வரை செயல் பட்டவர். கட்சியின் மதுரை மாவட்டக் குழுவில் 1990 முதல் 25 ஆண்டு காலம் செயல்பட்டவர். மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பல்லாண்டு காலம் செயல்பட்டார். கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.  மதுரையிலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொழிற் சங்கம், கட்சி அரங்கம், மாதர் இயக்கம்  உள்ளிட்ட பல்வேறு அரங்க ஊழியர் களுக்கு மார்க்சியப் பொருளா தாரத்தை கற்பிக்கும் ஆசானாக திகழ்ந்தவர்.  கட்சியின் நாளேடான தீக்கதிரோடு இரண்டறக் கலந்தவர் தோழர் ஜோசப். தீக்கதிர் ஏடு துவங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே தீக்கதிரின் கட்டுரை யாளராக தனது எழுத்துப்பணியை துவங்கிய அவர், சுமார் 50 ஆண்டு காலம் ஆயிரக்கணக்கான கட்டுரை களை எழுதியிருக்கிறார். இதன் வழியாக தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களுக்கு மார்க்சிய, பொருளாதார ஞானத்தை ஊட்டுவதில் மகத்தான பங்கினை செலுத்தியவர். மார்க்சிய அறிஞர்கள் பலரது கட்டுரைகளை எளிய நடையில் தொழிலாளி வர்க்க தோழர்கள் புரிந்துகொள்ளும் வகையில் இடைவிடாமல் எழுதிய வண்ணம் இருந்தார். தனது இறுதிக்காலத்தில் கட்சியின் தீக்கதிர் ஆசிரியர் குழு கிளையில் தம்மை இணைத்துக் கொண்டு ஆசிரியர் குழுவிற்கு வழிகாட்டியும் வந்தார். தோழர் ஜோசப் மறைந்த ஜூன் 30 அன்றைய தீக்கதிர் இதழில் கூட அவரது கட்டுரை இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தோழர் இ.எம்.ஜோசப் அவர்களது மறைவால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி ஓர் அறிவார்ந்த ஆளுமையை, எண்ணற்ற ஊழியர்களை இயக்கத் தின்பால் ஈர்த்த ஓர் அர்ப்பணிப்புமிக்க தலைவரை இழந்திருக்கிறது. அவரது மறைவுக்கு கட்சியின் மாநில செயற்குழு செவ்வணக்க அஞ்சலியை உரித்தாக்குகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், தமிழக இன்சூரன்ஸ் ஊழியர் இயக்க தோழர்கள் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட தோழர் களுக்கு கட்சியின் மாநில செயற்குழு இதயப்பூர்வமான ஆறுதல்களை தெரிவிக்கிறது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சீத்தாராம் யெச்சூரி, என்.சங்கரய்யா இரங்கல்
தோழர் இ.எம்.ஜோசப் மறைவுச்  செய்தி அறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அதிர்ச்சியும் துயரமும் தெரிவித்துள்ளார். அவரது  குடும்பத்தினருக்கும் தோழர் களுக்கும் எனது இதயப்பூர்வமான ஆறுதல்களை தெரிவியுங்கள் என்றும், தோழர் ஜோசப் ஒரு சிறந்த கம்யூ னிஸ்ட் என்றும் சீத்தாராம் யெச்சூரி தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தோழர் ஜோசப், பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி யோடு அவ்வப்போது தொலைபேசி  மூலம் பல்வேறு அரசியல் பிரச்சனை களையும் ஆலோசனைகளையும் நேரடியாக பகிர்ந்துகொண்டிருந்தவர் என்பது நினைவுகூரத்தக்கது. தோழர் ஜோசப் மறைவுச் செய்தி அறிந்து கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு இதயப் பூர்வமான ஆறுதல்களை தெரி வித்துள்ளார். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் விடுத்துள்ள செய்தியில், தோழர் ஜோசப் மறைவு ஈடுசெய்யவே முடியாத மிகப்பெரிய இழப்பு; அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தியை ஏற்கவே மனம் மறுக்கிறது. மாமனிதர் அவர். மிக நீண்டகாலமாகவே எனக்கு பல்வேறு துறைசார்ந்த தகவல்களை, விசயங்களை அளிப்பதில் ஒரு அறிவு ஆதார தோழராக திகழ்ந்தார் எனக்குறிப்பிட்டுள்ளார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்  உ.வாசுகி விடுத்துள்ள செய்தியில் தோழர் ஜோசப் மறைவு அதிர்ச்சி தரு கிறது என்றும், கட்சிக்கும் இன்சூரன்ஸ்  ஊழியர் இயக்கத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரத்தக்க து என்றும் கடினமான பொருளாதார பிரச்சனை களை எளிய தொழிலாளர்கள் புரிந்து  கொள்ளும் விதத்தில் அவர் கூறும் விதம் வியக்கத்தக்கது என்றும் குறிப் பிட்டுள்ளார். கட்சியின் பல்வேறு தளங்களில் செயல்படும் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த எழுத்தாளர் காஸ்யபன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தலைவர்கள் அஞ்சலி
தோழர் இ.எம்.ஜோசப் மறைவுச்  செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், மதுக்கூர் ராமலிங்கம், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் என்.நன்மாறன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயற்குழு, மாவட்டக்  குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டிச் செயலாளர்கள் உட்பட ஏராள மானோர் அவரது இல்லத்திற்குச் சென்று  அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

எல்ஐசி ஊழியர்கள்-தொழிற்சங்கத் தலைவர்கள்
.அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் அமானுல்லா கான், அகில இந்திய பொதுச் செய லாளர் வி.ரமேஷ், இணைச்செயலா ளர் எம்.கிரிஜா, தென்மண்டல இன்  சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி.செந்தில் குமார், துணைத் தலைவர்கள் க.சுவாமிநாதன், எஸ்.சிவசுப்பிர மணியன், இணைச் செயலாளர் வி.சுரேஷ், உதவிப் பொருளாளர் வி.ஜானகிராமன், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென் மண்டல பொதுச் செயலாளர் ஜி. ஆனந்த், துணைத் தலைவர் எஸ்.பால சுப்பிரமணியன், தமிழக கோட்டச் சங்கங்களின் தலைவர்கள் கே.மனோகரன்(சென்னை), பழனி ராஜு, எஸ்.ராமன்(வேலூர்), ஏ.கலிய பெருமாள்(சேலம்), துளசி தரன்(கோயம்புத்தூர்), சி.முத்துக் குமாரசாமி(திருநெல்வேலி), மதுரைக் கோட்டத் தலைவர் ஜி.மீனாட்சி சுந்தரம், செயலாளர் வி.ரமேஷ் கண்ணன், நிர்வாகிகள் எம்.விஜயா, சுரேஷ்குமார், தணிகைராஜ், மகா லிங்கம், நாகராஜ், சித்ரா, பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகி கள் ராஜேந்திரன், ரமேஷ், வி.எஸ்.எஸ்.ராஜன், குருசாமி, தமுஎகச தலை வர்கள் ச.தமிழ்செல்வன், களப்பிரன், லட்சுமிகாந்தன், எல்ஐசி ஓய்வு பெற்ற பென்சனர் சங்க நிர்வாகிகள் சி.சந்திரசேகரன், ஆறுமுகம், அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலப் பொருளாளர் என்.ஜெயச்சந்திரன், பிஎஸ்என்எல்இயு மதுரை மண்டல செயலாளர் செல்வின் சத்தியராஜ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்

தீக்கதிர் ஊழியர்கள் அஞ்சலி
தோழர் இ.எம்.ஜோசப் உடலுக்கு மாலை அணிவித்து தீக்கதிர் சார்பில் மூத்த எழுத்தாளர் என்.ராம கிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர் வி.பரமேசுவரன், பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன், இடைக் கமிட்டி செயலாளர் ப.முருகன் மற்றும் ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர். ஆசிரியர் இயக்கத்தின் முது பெரும் தலைவர் கே.ஏ.தேவராஜன் உள்ளிட் டோரும் அஞ்சலி செலுத்தினர். இன்று இறுதி நிகழ்ச்சி இ.எம்.ஜோசப் இறுதி நிகழ்ச்சி திங்களன்று காலை பத்து மணிக்கு அவரது (மதுரை சாந்தி நகர், எல்.ஐ.சி.காலனி) இல்லத்தில் நடை பெறுகிறது. முன்னதாக எட்டு மணிக்கு இரங்கல் கூட்டம் நடை பெறுகிறது.