tamilnadu

பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கிய விவகாரம்

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் கீழ் 120-க்கும் மேற்பட்ட  அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக கடந்த  மூன்று ஆண்டுகளாக ெஜகநாதன்  என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் ெஜகநாதனின் பதவிக் காலத்தில் பல்வேறு முறை கேடுகள் ஊழல் குற்றச்சாட்டுகள் என தொடர்ச்சியான புகார்கள் எழுந்து வந்தது.

இந்த சூழலில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உள்ள ஜெகநாதன், பூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவ னத்தைத் தொடங்கி, பல்கலைக் கழகத்தில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

சேலம் பெரி யார் பல்கலைக்கழக தொழிற் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங் கோவன் என்பவர் அரசு அனுமதி பெற்று சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படை யில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அதிரடியாகச் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்து துணை வேந்தர் ஜெகநா தனை கடந்த டிச.26 ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அவருக்கு சேலம் நீதி மன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கூடுதல் ஆணையர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு புதனன்று (ஜன.3) விசாரணைக்கு வந்தபோது, “பெரு நகரக் குற்றவியல் நடுவர் (மாஜிஸ்ட்ரேட்) நீதிமன்ற காவலில்  வைக்க உத்தரவிட மறுத்தது தவறு.  

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிந்துள்ளது, சிறப்பு  நீதிமன்ற அதிகாரத்தை மாஜிஸ் ட்ரேட் எடுக்க முடியாது”என காவல் துறை சார்பில் வாதிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரி யார் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாக விரிவான அறிக்கை  தாக்கல் செய்யும்படி மாஜிஸ்ட் ரேட்டுக்கு உத்தரவிட்ட உயர்நீதி மன்ற நீதிபதி, விசாரணையை ஜனவரி 12க்கு தள்ளிவைத்தார்.