சென்னை,பிப்.12- இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் திங்கள் கிழமை(பிப்.12) கூடிய நிலையில், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார்.
ஆளுநரின் தேசிய கீதம் குறித்த கருத்துக்கு விளக்க மளித்த பேரவைத் தலைவர் மு. அப்பாவு, தேசிய கீதம் இசைப்பது குறித்து கடந்தாண்டு எனக்கு ஆளு நர் கடிதம் எழுதியிருந்தார். இந்தப் பிரச்சனை ஏற்கெனவே தீர்க்கப்பட்டு விட்டது.
இன்றைய நிகழ்வில் ஆளுநர் உரை என்பது அரசமைப்புச்சட்டத்தின்படி ஆளுநருக்கு உள்ள கடமை. அந்த கடமையை நிறை வேற்ற ஆளுநர் பேர வைக்கு வருகை தந்தார். இப்பேரவை எப்போதும் மரபுகளை மதித்து பின்பற்றி வருகிறது. அந்த வகையில் ஆளுநர் உரையின் தொடக் கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தும், உரை முடிவின் போது தேசிய கீதமும் பாடப்பட்டு வருகிறது. ஆளுநர் உரையை பதிவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி அதில் பங்கேற்காமல் புறப்பட்டுச் சென்றார் என்றார். ஆளுநர் கிளம்பும்போது, “தேசிய கீதம் இனிதான் பாடுவார் கள்” என்று பேரவைத் தலை வர் அப்பாவு கூறிய போதும் அதை பொருட்படுத்தாமல் ஆளுநர் அவையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
எடப்பாடி நழுவல்
இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக ஆளுநர் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். கோரிக்கை நிறைவேற்றப் படாத காரணத்தால் ஆளுநர் புறக்கணித்துள்ளார். இது ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே உள்ள பிரச்சனை” என்று கூறி பிரச்சனைக்கு பதில் அளிக்காமல் நழு வினார்.
சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, சிபிஐ உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட பலரும் சட்ட மன்ற மரபுகளை பேரவைத் தலைவர் பின்பற்றுகிறார். ஆனால், ஆளுநர் தொடர்ந்து அடாவடித்தனம் செய்து வருகிறார். ஆளு நரின் இந்த செயல் வன்மை யாக கண்டிக்கத்தக்கது என்றனர்.
ஆளுநர் பேச்சு நீக்கம்
தமிழ்நாடு சட்டப்பேர வையில் அச்சிடப்பட்ட ஆளு நர் உரையில் இருந்தவை தவிர ஆளுநர் பேசிய இதர கருத்துக்கள் அனைத்தும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.