சென்னை,ஆக.29-
தேர்தல் கால வாக்குறுதிப்படி குவிண் டாலுக்கு ரூ.2500 விலை கொடுக்கக் கூடிய வகையில் மாநில அரசு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கவேண் டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நடப்பாண்டு நெல்லுக்கான ஊக்கத்தொகையை மாநில அரசு (28.8.2023) அறிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல் குவிண் டாலுக்கு பொதுரகத்திற்கு மாநில அரசின் ஊக்கத்தொகையாக ரூ.75-ம், சன்னரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.100-ம் வழங்கி வந்தனர். இந்தாண்டு செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து கொள்முதல் செய்யக்கூடிய நெல்லு க்கு ஒரு குவிண்டாலுக்கு கடந்த ஆண்டு வழங்கியதை விட வெறும் 7 ரூபாய் மட்டுமே உயர்த்தி ஊக்கத்தொகையாக பொதுரகத்திற்கு 82 ரூபாயும், சன்னர கத்திற்கு 107 ரூபாயும் அறிவித்திருப் பது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்ற த்தை அளித்துள்ளது.
நெல் உற்பத்தி செய்யப்படும் இடு பொருட்கள், ஆள் கூலி மிகக் கடுமை யாக உயர்ந்திருக்கக்கூடிய இந்த சூழ லில் ஒரு குவிண்டாலுக்கு 3 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்தாலும் கட்டுப் படியாகாத நிலையில், திமுக தேர்தல் வாக்குறுதியில் நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்குவோம் என்று வாக்கு றுதி அளித்தார்கள். குறைந்தபட்சம் அந்த அடிப்படையில் இந்த ஆண்டு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2500 விலை கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், மாநில அரசின் ஊக்கத்தொகையாக கடந்த ஆண்டை விட வெறும் ரூ.7 மட்டும் உய ர்த்தி வழங்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல.
எனவே, தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் குவிண்டாலுக்கு ரூ.2500 விலை கொடுக்கக் கூடிய வகையில் மாநில அரசு தன்னுடைய ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் விவ சாயிகள் கொண்டு வரும் அனைத்து நெல்லையும் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் காலதாமதமில்லா மல் கொள்முதல் செய்வதற்கான உத்தரவாதத்தையும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை தேக்காமல் உடனுக்குடன் அங்கிருந்து ஏற்றி குடோன்களுக்கு அனுப்ப தமிழ்நாடு நுகர்வு வாணிப கழகம் ஏற்பாடு செய்வ தற்கான உத்தரவையும், கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ கொண்ட மூட்டைக்கு 45 ரூபாய் வரை லஞ்சமாக பெறுவதை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும், கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் குளறுபடிகளை போக்குவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.