தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் உரிமையியல் நீதிபதி பதவிக்கான எழுத்துத்தேர்வு ஞாயிறன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. விழுப்புரத்தில் தேர்வு மையத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பவானி சுப்புராயன், தண்டபானி, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட நீதிபதி எஸ்.ஆனந்தி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.