திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா தும்பேரி அண்ணா நகரில் பத்தாண்டுகளுக்கு முன் பார்வை இழந்து வறுமையில் வாடும் குடும்பத் தலைவரின் நிலையை வாட்ஸ் அப் மூலம் அறிந்த மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவனருள், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியரை ஆய்வு செய்து இல்லம் தேடி சென்று முதியோர் உதவித் தொகை வழங்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வட்டாச்சியர் மகாலட்சுமி தும்பேரி அண்ணா நகருக்கு இல்லத்திற்கே சென்று ராஜாமணியிடம் உதவி பெறும் ஆணையை வழங்கினார்.