tamilnadu

img

ஆர். முத்துப்பெருமாள் மறைவு சிபிஎம் இரங்கல்

சென்னை:
நாகை தோழர் ஆர். முத்துப்பெருமாள் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ஆர். முத்துப்பெருமாள் (68) விபத்தில் சிக்கி கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும், புதனன்று (31.07.2019) சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையளிக்கிறது. அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

தோழர் ஆர். முத்துப்பெருமாள் தனது இளம் வயதிலேயே வாலிபர் இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். கட்சியின் கீழையூர் ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் முன்னின்று போராடியவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், நாகை மாவட்ட தோழர்களுக்கும் இழப்பாகும். அன்னாரது மறைவால் துயருற்றிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது என்று மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.