நாட்டின் நிலக்கரி இறக்குமதி நவம்பர் மாதத் தில் 11.7 சதவிகிதம் அதிகரித்து 20.95 லட்சம் டன்னாக உள்ள நிலையில், இந்த அளவு கடந்த 2022 நவம்பரை விட அதிகம் என பி2பி இ- காமர்ஸ் நிறுவனமான எம்ஜங்க்ஷன் சர்வீசஸ் தெரி வித்துள்ளது. கடந்த 2022 நவம்பரில் நிலக்கரி இறக்குமதி 187.5 லட்சம் டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த 3 மாதமாக சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனுவுக்குப் பதில ளிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தில்லி யில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலுக்கு சஞ்சய் சிங் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 605 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4,002 ஆக உள்ளது. கேரளத்தில் 2, கர்நாடகம் மற்றும் திரிபுராவில் தலா ஒன்று என ஒரே நாளில் 4 பேர் கொரோனா பாதிப்பு கார ணமாக உயிரிழந்துள்ளனர். முக்கியமாக கொரோ னாவின் புதிய திரிபான ஜே.என்.1 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 682 ஆக உயர்ந்துள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் “இந் தியா” கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடு பட்டு வருகிறது. இந்நிலையில், 539 தொகுதி களுக்கான ஒருங்கிணைப்பாளர்களின் பட்டி யலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.
பெண் நிருபரிடம் தவறாக நடந்துகொண்ட தாக தொடரப்பட்ட வழக்கில் மலை யாள நடிகரும் பாஜக பிரமுகருமான சுரேஷ் கோபிக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் நடிகர் யாஷின் 38-ஆவது பிறந்தநாளுக்கு கட் அவுட் வைக்கும் பொழுது மின்சாரம் தாக்கியதில் ஹனுமந்த, முரளி நடவினமணி, நவீன் ஆகிய 3 பேர் பலியாகிய நிலையில், 4 பேர் படு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 10% இட ஒத்துக்கீட்டை அமல்படுத்தக்கோரி பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் திங்களன்று தள்ளுபடி செய்தது. 10% இடஒதுக் கீட்டை அமல்படுத்த வேண்டுமா என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடுவதில் நீதி மன்றம் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.