tamilnadu

img

குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் அம்பத்தூர் தொழிற்பேட்டை புறவழிச் சாலை

அம்பத்தூர், பிப். 16- அம்பத்தூர் தொழிற் பேட்டை 1400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள் ளது. அங்கு மட்டுமல்லாமல் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், முகப்பேர், அத்திப்பட்டு, மண்ணூர்பேட்டை, மங்கள புரம், பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்த்து சுமார் 5 ஆயிரம் சிறிய, பெரிய நிறுவனங்கள் உள்ளன. மேலும், இங்கு 100க்கும் மேற்பட்ட ஏற்றுமதி ஆடை, சாப்ட்வேர், கால் சென்டர் நிறுவனங்களும் உள்ளன. இங்கு சென்னை, புறநகர், திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினசரி சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்ற னர். நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும், இல குரக வாகனங்களும் தமிழ கம், ஆந்திரா, பெங்களூரு, வேலூர் உள்ளிட்ட பகுதி களில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வந்து செல்கின்றனர். மேலும் அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம், எம்.ஜி.ஆர்.புரம், அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடி யிருப்பு, ஐய்யப்பா நகர், செல்லியம்மன் நகர், ஐசிஎப் காலனி, கலைவணர் நகர், பாரதிதாசன் நகர், தமிழ் நாடு வீட்டுவசதி வாரிய குடி யிருப்பு பேஸ் 1, 2, 3 அத்திப் பட்டு ஆகிய பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக் கிறார்கள். இவர்கள் அம்பத் தூர் தொழிற்பேட்டை, அண்ணாநகர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால், இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அம்பத்தூர் தொழிற்பேட்டை யில் இருந்து வானகரம் செல்லும் புறவழிச் சாலை யில் இந்தியா லேண்ட் அருகே குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவதால் தண்ணீர் வீணாவதுடன், சாலை குண்டும் குழியுமாக மாறி விட்டன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படு கின்றர். இரவு நேரங்களில் சரியான மின் விளக்கு வசதியில்லாததால் வயதான வர்கள், வாகன ஓட்டிகள் அடிக்கடி பள்ளத்தில் விழுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் இந்த குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு புதிய சாலை அமைக்கப்பட் டன. ஆனால் முறையாக குழாய்களை மாற்றி சீர்படுத்தாததால் மீண்டும் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளி யேறி சாலைகள் பழுதடைந் துள்ளன. எனவே சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் புதிய பைப்புகளை மாற்றி சாலையை சீரமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.