tamilnadu

img

வக்பு சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும்

இந்தியாவில் ராணுவம் மற்றும் ரயில்வே துறை நிர்வாகங்களுக்கு அடுத்து மிகப்பெரிய சொத்துக்களை கொண்டதாக வக்பு வாரியம் திகழ்கிறது. இவையெல்லாம் பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், தர்காக்கள், அறக்கட்டளைகள், சேவை அமைப்புகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருப்பவையும். இவற்றின் வழியாக வரும் வருமானங்கள் அவை சார்ந்த நலப் பணிகளுக்கு செலவிடப்படுகிறது. இவற்றை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வக்பு வாரியங்கள் நிர்வகிக்கின்றன. இவற்றை சீர்குலைக்கும் உள்நோக்கிலேயே பாஜக அரசின் புதிய அணுகுமுறைகள் உள்ளன. இதில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் செய்வது எனில், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்துடன் ஒரு குழுவை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும். அக்குழுவின் ஆலோசனைகளின் படி எந்த சட்ட முன்வடிவையும் மேற்கொள்ள வேண்டும்.\

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி