tamilnadu

ராமாபுரத்தில் விபத்து- தாறுமாறாக ஓடிய லாரி மோதி 3 பேர் பலி

சென்னை,ஏப். 21-சென்னை ராமாபுரத்தில் பேருந்துக்கு காத்திருந்த 3 பேர் மீது தறிகெட்டு ஓடியலாரி மோதியது. இதில் 3 பேரும் லாரியில் சிக்கிஉடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.சென்னை ராமாபுரம் மியாட் ஆஸ்பத்திரி அருகில்ஞாயிறன்று (ஏப்.20) லாரி ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. அந்த லாரி திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. அப்போது அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் 3 பேர் வெளியூர் செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தனர். தறிகெட்டு ஓடிய லாரி 3 பேர் மீதும் மோதியது.இந்த விபத்தில் 3 பேரும் லாரியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரின்உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்தமூர்த்தி, முரளி, சிவகுமார் என்பதும் சொந்த ஊருக்கு செல்ல பேருந்துக்கு காத்திருந்த போது விபத்தில் சிக்கி இறந்ததும் தெரியவந்தது. விபத்து நடந்ததும் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிய ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

;