tamilnadu

img

பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே பயங்கர மோதல்

119  தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 அன்று சட்ட மன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்  என்றும், காங்கிரஸ் கட்சி  கடும் போட்டி அளிக்கும்  என்றும், பாஜகவின் கனவு கானல் நீரைப் போன்று காணாமல் போகும் என்றும் கருத் துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஹைதராபாத் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்ரெட்டி ரங்கா ரெட்டியும், பிஆர்எஸ் சார்பில் மஞ்சிரெட்டி கிஷன் ரெட்டியும் வியாழனன்று வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்றனர். அப்போது இரு கட்சியினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இரண்டு கட்சியினர் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் ஒரு  பெண் உள்பட இருவர் படுகாயமடைந்த நிலை யில், கல்வீசியவர்களை போலீசார் தடியடி நடத்தி  விரட்டினர். இப்ராஹிம்பட்டினத்தில் போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த  சம்பவத்தால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.