இன்று மகாவீரர் ஜெயந்தி
சென்னை, ஏப்.20- சமண மதத்தின் 24-ஆவது மற்றும் கடைசித் தீர்த்தங்க ரரான மகாவீரரின் பிறந்த நாளை, அந்த சமயத்தைச் சேர்ந்தர்கள் ‘மகாவீரர் ஜெயந்தி’யாக கொண்டாடி வருகின்றனர். நல்லிணக் கம் மற்றும் அமைதியைக் கடைபிடிக்க கொண்டாடப் படும் இந்த மகாவீரர் ஜெயந்தி, இந்த ஆண்டு இன்று (ஏப்ரல் 21)கொண்டாடப்படுகிறது. எவ்வுயிர்க்கும் துன்பம் இழைக்கக் கூடாது என்பது மகாவீரரின் முதன்மையான போதனை என்பதால், அவ ரது பிறந்த நாளில் தமிழகத் தில் இறைச்சிக் கடைகள் மற்றும் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள் ளது.
தேர்தல் பத்திரம் மீண்டும் வருமாம்!
நிர்மலா சொல்கிறார்
புதுதில்லி, ஏப்.20- 2024 மக்களவைத் தேர்த லில் பாஜக வென்று ஆட் சிக்கு வந்ததும், தேர்தல் பத்திரங்கள் திட்டம் புத்துயிர் பெறும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரி வித்துள்ளார். ‘நடப்பு மக்க ளவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சியமைத்ததும் வல்லுநர்களுடனான முறை யான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்’ என அவர் கூறி யுள்ளார். ‘உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோருவது தொடர் பாக ஒன்றிய அரசு இன்னமும் முடிவு செய்யவில்லை’ என் றும் குறிப்பிட்டுள்ளார்.
12 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில்
சென்னை, ஏப்.20- தமிழ்நாட்டில் சனிக்கிழ மையன்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி யது. கரூர் பரமத்தி, வேலூர், திருச்சி-106 டிகிரி, ஈரோடு, மதுரை விமான நிலையம்-105, திருத்தணி, சேலம், மதுரை நகரம், திருப்பத்தூர் - 104 தஞ்சாவூர் - 103, தரும புரி - 102, பாளையங்கோட் டையில் - 101 டிகிரி பாரன் ஹீட் என வெயில் பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலை:
நாளை முதல் கூடுதல் பேருந்துகள்
சென்னை, ஏப்.20- சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 22, 23 தேதிகளில் திருவண்ணா மலைக்கு சிறப்புப் பேருந்து கள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து ஏப்ரல் 22 அன்று 527 பேருந்து களும், 23-ஆம் தேதி 628 பேருந்துகளும் திரு வண்ணாமலைக்கு இயக்கப் படும். மேலும், சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்க ளூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணா மலைக்கு அரசுப் பேருந்து களில் முன்பதிவு செய்து பய ணிக்கவும் வழிவகை செய் யப்பட்டுள்ளது. www.tnstc. in மற்றும் Mobile APP மூலம் முன்பதிவு செய்து பயணிக்க லாம் என்று கூறப்பட்டுள்ளது.