செங்கல்பட்டு, செப். 27- எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நான்கு நாட்கள் நடை பெறும் தேசிய அளவிலான தொழில் நுட்ப மேலாண்மை திருவிழாவை இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வெள்ளிக் கிழமை (செப்.27) தொடங்கிவைத்தார். எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களின் சார்பில் ஆண்டு தோறும் ஆரூஷ் என்கிற அறிவியல் பொறியியல் மற்றும் மேலாண்மை தொழில் நுட்ப திருவிழா தேசிய அளவில் நடத்தப்பட்டுவருகிறது. 13 வது ஆண்டாக செப்.26ஆம் தேதி முதல் 29 ந் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இந்த தொழில் நுட்ப திருவிழாவில் நாடு முழுவது மிருந்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்த 1000 பேர் என சுமார் 60 ஆயிரம் மாணவ மாணவி யர் பங்கேற்றுள்ளனர். ஆரூஷ் திருவிழா தொடக்கவிழா காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்விநிறுவனத்தில் உள்ள டி.பி.கணேசன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகைதந்தவர்களை ஆருஷ் மாணவர் செயலாளர் திவேஷ்கே.நர்வாணி வரவேற்றார். நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் அறிவி யல் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் தலை வர் டாக்டர் பி.சத்தியநாராயணன் தலைமை வகித்துபேசினார் விழாவில் மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையத்தின் இயக்கு னர் விஞ்ஞானி வி.நடராஜன், இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோர் கலந்து கொண்டு சிரப்புரையாற்றினார்.