சென்னை, ஆக. 29 - தமிழ்நாட்டில் நெடுஞ் சாலைத் துறையின் கீழ் உள்ள 9479 பாலங்களை ஆய்வு செய்து உறுதித் தன்மையை கண்டறிந்து பழுதுகள் நீக்க ‘பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு’ உரு வாக்க குழு அமைத்து தமிழ் நாடு அரசு உத்தரவிட்டுள்ளது
மேலும், நெடுஞ்சாலைத் துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யவும் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த குழு, நெடுஞ் சாலைத்துறையின் கீழ் கட்டப் பட்ட பாலங்களை ஆய்வு செய்து பழுது ஏற்பட்டு இருப்பின் அதை உட னுக்குடன் சீரமைக்கவும் உத்தரவு பிறப்பித்திருக் கிறது.
இந்தக் குழுவில் நெடுஞ் சாலை துறை இயக்குநர் செல்வதுரை, கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறை தலைமை பொறியாளர் சத்திய பிரகாஷ், சாலை மேம்பாட்டு நிறுவன தலை மை மேலாளர் பழனிவேல், கண்காணிப்பு பொறியாளர் ஆர். கிருஷ்ணசாமி, தேசிய நெடுஞ்சாலை துணைத் தலைமை பொறியாளர் சிவ குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.