சென்னை, ஜூலை 6 - கழிவுநீர் கலந்து குடிநீர் வருவ தால் தரமணி பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். வீராணம் திட்டம், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மற்றும் லாரிகள் மூலமாக வேளச்சேரி தொகுதி முழு வதும் குடிநீர் விநியோகம் செய்யப்படு கிறது.
178வது வட்டம் தரமணி பெரியார் நகர் 2, பாரதி நகர், அண்ணாநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு, மேற்கண்ட மூன்று திட்டங்களின் வாயிலாக குழாய் மூலமாகவும், சில பகுதி களில் லாரிகள் மூலமாகவும் தண்ணீர் தரப்படுகிறது. கோடைக்காலம் தொடங்கிய பிறகு கடந்த 2 மாதங்களாக வேளச் சேரி தொகுதியில் குடி நீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நெம்மேலி யில் 1516 கோடி ரூபாய் செல வில், நாள்தோறும் 15 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக மாற்றும் இரண்டாவது ஆலை அமைக்கப்பட்ட பிறகும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், குழாய் வழியாக விநி யோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், ஏராளமான மக்க ளும் தொடர்ந்து குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரி வித்து வந்தனர். ஆனால், அதன்மீது அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அண்மையில் சைதாப்பேட்டையில் கழிவு நீர் கலந்து குடிநீர் பருகிய பலர் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு குழந்தை உயிரிழந்தது. இதனால் மக்கள் தண்ணீரை பயன்படுத்த தயங்கினர். இந்த நிலையில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்,“தொகுதி முழுவதும் தடங்கலின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்,
குடிநீரில் கழிவு நீரை கலந்து விநியோகம் செய்து மக்களின் உயிருக்கு ஆபத்து விளை விக்கும் அலட்சியமான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், 178வது வட்டம், தரமணி பெரி யார் நகர் 2, பாரதி நகர், மற்றும் அண்ணாநகர் ஆகிய இடங்களில் உள்ள வீடுகளுக்கு உடனடியாக குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். பல முறை மனுக்கள் அளித்தும் அதனைக் கண்டுக்கொள்ளாத குடிநீர் வாரி யத்தை கண்டிக்கிறோம்; மக்களை போராடத் தூண்டாதே” ஆகிய வாசகங்கள் அடங்கிய சுவ ரொட்டி கள் ஒட்டப்பட்டது.
இதனையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜ குமாரி, வேளச்சேரி பகுதிச் செய லாளர் எஸ்.முகமதுரஃபி, நிர்வாகி கள் ராமமூர்த்தி, ராஜேந்திரன், கும ரேசன், கார்த்தி, லாரன்ஸ் ஆரோக்கிய சகாயராஜ் உள்ளிட் டோருடன் 178வது வட்ட வாரிய அதி காரிகள் அன்பு, சந்திரசேகரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒருவார காலத்திற்குள் அனைத்து குறைகளையும் சரி செய்வதாக உறுதி அளித்தனர்.