மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது 37 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் புதிய செயலாளராக பி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் மருத்துவ செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
மாற்றுத்திறனாயிகள் நலத்துறை ஆணையராக ஜெசிகா, போக்குவரத்துத்துறை ஆணையராக நிர்மல் குமார், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராக தாரேஷ் அகமது உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்த நசிமுதீன், தொழிலாளர் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைத்துறை செயலாளரான தீரஜ்குமார், வணிகவரித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.