tamilnadu

img

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாடு வீரர் தகுதி

விளையாட்டு உலகின் முதன்மையான தொடரான ஒலிம்பிக் தொடரின் 33ஆவது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஜூலை 26 அன்று தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி சார்பில் ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் செவ்வாயன்று அறிவித்தது.