tamilnadu

img

முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பின்படி, 
* மருத்துவத் துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், உயர்கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சுற்றுலா, இந்து அறநிலையத்துறை மற்றும் கலாசாரத் துறை முதன்மைச் செயலாளராக சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
* நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக மணிவாசனை நியமிக்கப்பட்டுள்ளார்.
*சமூகப் பாதுகாப்புத் திட்டச் செயலாளராக ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
* பொதுப் பணித்துறை செயலாளராக மங்கத் ராம் நியமிக்கப்பட்டுள்ளார். 
* நீர்வளத்துறை செயலாளராக இருந்த சந்தீப் சக்சேனா, செய்தி மற்றும் காகிதத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* வனத்துறை முதன்மைச் செயலாளராக செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 
* நெடுஞ்சாலைத் துறை செயலாளராக செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
* இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் இயக்குநராக விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
* காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராக வெங்கடாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். 
* நில சீர்திருத்த ஆணையராக ஹரிஹரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
* போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளராக லில்லி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


 

;