தமிழ்நாடு சட்டப்பேரவையில், மார்ச் 14 ஆம் தேதியன்று 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
மார்ச் 15-ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பதை அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.