தமிழ்ப் புதல்வன் திட்டம்- கோவையில் இன்று துவக்கம்!
சென்னை, ஆக. 8 - மாணவியரைத் தொட ர்ந்து, ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை, அரசுப் பள்ளிகளில் படித்து விட்டு உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளியன்று (ஆக.9) தொடங்கி வைக்கிறார்.
கோவை அரசுக் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும், இதற்கான பிரம்மாண்ட விழாவில், கோவை செம்மொழி பூங்கா வளாகத்தில் அமைக்கப் பட்ட கலைஞர் நூலகம் மற் றும் அறிவுசார் மையம் ஆகிய வளர்ச்சித் திட்டங்களுக்கும் முதல்வர் அடிக்கல்நாட்டு கிறார்.
ஆக. 15-இல் கிராம சபைக் கூட்டம்
சென்னை,ஆக.8- சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று அனை த்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் பொன்னையா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். “சுதந்திர தினத்தன்று காலை 11 மணி க்கு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இதில் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என்று குறிப் பிட்டுள்ளார்.
32 மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை
இராமேஸ்வரம், ஆக.8- எல்லை தாண்டி மீன்பிடித் ததாகக் கூறி, இராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 32 பேரை இலங்கைக் கடற் படையினர் வியாழன் மாலை சிறைப்பிடித்துச் சென்றனர். அவர்களது நான்கு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை கற்பிட்டி கடற் படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்க ரை தமிழ்நாடு மீனவர் சங்கப் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்த ஒரு நாள் கழித்து இலங்கை கடற்படையினர் மீண்டும் தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளனர்.
எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆகஸ்ட் 15ல் விண்ணில் பாய்கிறது
சென்னை, ஆக. 8 - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன இ.ஒ.எஸ்.-08 எனும் செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஏவுதளத் தில் இருந்து சுதந்திர தின மான ஆகஸ்ட் 15 அன்று காலை 9.17 மணிக்கு விண் ணில் ஏவப்பட உள்ளது.