tamilnadu

தொகுதி மறு சீரமைப்பும் தமிழகத்திற்கு எதிரான சதித்திட்டமே!

சென்னை, பிப். 14 - ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’, மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு ஆகிய இரண்டு திட்டங் களுக்கு எதிராகவும், இவற்றை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாடு சட்டப்பேர வை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டா லின், இந்த இரண்டு அரசினர் தனித் தீர்மானங்களையும் சட்டப்பேரவை யில் கொண்டுவந்த நிலையில், அவை அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன்  ஒருமனதாக தீர்மானம் நிறைவேறி யுள்ளது.

முதல்வர் கொண்டுவந்த  2 தனித் தீர்மானங்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதன்கிழமை (பிப்.14) கேள்வி நேரம்  முடிந்ததும், அரசினர் தனித் தீர்மானங் களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை அவை  முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்தார். 

அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2 அரசினர் தனித் தீர்மானங்களை கொண்டு வந்தார். 

அதனொரு தீர்மானத்தில், “2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொ கைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.

1971 மக்கள்தொகை அடிப்படையை மாற்றக்கூடாது
தவிர்க்க இயலாத காரணங்களி னால் மக்கள்தொகையின் அடிப்படை யில் சட்டமன்ற - மக்களவைத் தொகுதி களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப் படையில், தற்போது மாநிலச் சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக் கிடையே எந்த விகிதத்தில் தொகுதி களின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய  அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

மக்கள் நலன் கருதி கடந்த 50  ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பொருளாதார வளர்ச்சி திட்டங் களையும் மக்கள் நல்வாழ்வு திட்டங் களையும் சிறப்பாக நடைமுறைப் படுத்தியதற்காக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

தொடர்ந்து உரையாற்றிய முத லமைச்சர், “ஒரு நாடு ஒரு தேர்தல்” என்ற கோட்பாடு மக்களாட்சி தத்து வத்திற்கு எதிரானது என்பதாலும்; நடை முறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பதாலும்; அது இந்திய அரச மைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று என்பதாலும்; இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட - பரந்து விரிந்த நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், மாநிலச் சட்டமன்றங் கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாலும்; அதிகாரப் பரவலாக்கல் என்ற கருத்தியலுக்கு எதிராக ‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது” என்ற மற்றொரு தீர்மானத்தையும் கொண்டு வந்தார்.இந்த இரண்டு தீர்மானங்களையும் உறுப்பினர்கள் ஒரு மனதாக நிறைவேற்றித் தரவேண்டு மென்று கேட்டுக் கொண்டார். 

சட்டமன்றக் கட்சிகள் ஒருமனதாக ஆதரவு
காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக உள்ளிட்ட  கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சரின் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர். பிறகு, குரல் வாக்கெடுப்பு  நடத்தப்பட்டபோது அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேரவையிலிருந்து வெளியேறி செய்தியாளர்களிடம் பேசுகையில் அரசின் தீர்மானத்தை எதிர்ப்பதாக கூறினார்.