tamilnadu

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொறுப்புத் தலைவராக டேனியல் ஜெயசிங்

சென்னை, ஜூன் 30- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொறுப்புத் தலைவராக சா.டேனியல் ஜெயசிங் செயல்படுவார் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழக முதல்வரின் வாக்குறுதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஜூலை 2 மாநிலம் முழுவதும் வட்டத்  தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் மு.அன்பரசு தலைமையில் ஞாயிறன்று சென்னையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் ஆ.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், தமிழக அரசு, அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;