சென்னை, செப். 25 - சட்டமன்றத் தேர்தலின்போது, 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதி யர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூ தியம் வழங்கப்படும் என்று திமுக வாக் குறுதி அளித்தது. அதன்படி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத் தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் வலி யுறுத்தி உள்ளார். சங்கத்தின் சென்னை மாவட்ட 8வது பிரதி நிதித்துவப் பேரவை புதனன்று (செப்.25) பெரியமேட்டில் நடைபெற்றது. இந்த பேர வையை தொடங்கி வைத்து நெ.இல.சீதரன் பேசுகையில், “தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். 70 வயதடைந் தவர்களுக்கு 10 விழுக்காடும், 75 வயது பூர்த்தி செய்தோருக்கு 15 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியமும் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி யாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 850 ஓய்வூதியம் தர வேண்டும். ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வு அறி விக்கும் அதே நாளிலிருந்து மாநில அரசு ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்துவதோடு, அதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். கம்யூடேஷன் பிடித்தம் செய்வதை 10 ஆண்டு களாக குறைக்க வேண்டும். குடும்ப நல நிதியினை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும், ஓய்வூதியர்களில் பாகுபாடின்றி ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும்” என்றார். “புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஒன்றிய அரசைப் போன்று மாநில அரசும் பணிக் கொடை வழங்க வேண்டும்” என்று வலி யுறுத்திய அவர், “ஓய்வூதியர்கள் அனை வருக்கும் வருமான வரியிலிருந்து ஒன்றிய அரசு விலக்கு அளிக்க வேண்டும். கொரோனா காலத்தில் மூத்த குடி மக்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில் பயண கட்டண சலுகைகளை மீண்டும் அளிக்க வேண்டும்” என்றார். பேரவைக்கு மாவட்டத் தலைவர் பி.எஸ். அப்பர் தலைமை தாங்கினார். இணைச் செய லாளர் எஸ்.ஏ.வெற்றி ராஜன் வரவேற்றார். இணைச் செயலாளர் மு.தங்கமணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வேலை அறிக்கை யை மாவட்டச் செயலாளர் என்.ராமசாமி யும், வரவு, செலவு அறிக்கையை பொருளா ளர் ஜெ.பட்டாபியும் சமர்ப்பித்தனர். தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன், அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன், ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் பொருளாளர் கு.பூபாலன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பா.ராமமூர்த்தி நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் ம.சந்திரன் நன்றி கூறினார்.