tamilnadu

img

சிறைவாசிகளுக்கு வீடியோ கால் பேசும் வசதியை ஏற்படுத்தி தரப்படும் என தமிழ்நாடு அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் சிறைவாசிகளுக்கு வீடியோ கால் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சிறைவாசிகள் தங்களது உறவினர்களுடன் பேசுவதற்கான கால அளவு என்பது மிகக்குறைவாக அதாவது 10 நாட்களுக்கு 1 முறை தொலைப்பேசி வாயிலாகப் பேச அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் வாரத்திற்கு 2 முறை பேசலாம் என அதிகரிக்கப்பட்டது.
கொரோனா காலக்கட்டத்தில் இருந்து வீடியோ கால் மூலமும் உறவினர்களுடன் பேச அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
கொரோனாவிற்கு பிறகு நேரடியாக உறவினர்கள் வந்து சிறைவாசியிடம் பேசினாலும், பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதாவது தொலைப்பேசியில் பேசும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் சிறைவாசிகள் தொலைப்பேசி வாயிலாக குடும்பத்தினருடன் வீடியோ காலில் வசதி வசதி ஏற்படுத்தித் தரப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சிறைவாசிகள் தொலைப்பேசி மூலம் குடும்பத்தினருடன் பேசுவதற்கான நேரத்தையும் அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
சிறைவாசிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுத்திடும் பொருட்டும், சிறைவாசிகள் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் ஏற்கனவே இருக்கும் ஆடியோ கால் வசதியின் கால அளவை மாதத்திற்கு 8 முறையில் இருந்து 10 ஆக உயர்த்தியதுடன், ஒரு அழைப்புக்கு 12 நிமிடங்கள் வரை பேசிக்கொள்ளலாம் எனவும் வீடியோ கால் வசதியும் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.