tamilnadu

img

தமிழ்நாடும் லெனினும்

ப்பினர்களில் ஒருவர் ஆச்சாரியா.  லெனின் இறந்த பொழுது சிந்தனை சிற்பி சிங்காரவேலர் தனது லேபர் கிசான் கெஜட் பத்திரிகையில் நீண்ட அஞ்சலி கட்டுரை எழுதினார். “லெனின் எனும் மாமனி தர் மறைந்துவிட்டார். நம் கண்ணுக்கு தெரியாத மாமனிதர்கள் உள்ள உலகில் இணைந்துவிட்டார்., தொழிலாளர்களின் உலகம், தனது வழிகாட்டியை தனது மீட்பரை இழந்து தவிக்கிறது” என எழுதி னார். மெரினா கடற்கரையில் லெனினுக் காக அஞ்சலி கூட்டத்தை சிங்காரவேலர் நடத்தினார்.  25.01.1924 அன்று சுதேசமித்திரன் கீழ்க் கண்டவாறு செய்தியை வெளியிட்டது: “ஜார் மன்னனின் எதேச்சதிகாரத்தை விரட்ட நினைத்த ரஷ்ய மக்கள் பொது வாக லெனின் ஆட்சி குறித்து திருப்தி அடைந்தனர் என்பது தெளிவு. பிரிட்டிஷா ரும் பிரான்சும் லெனினை விரட்ட பல முயற்சிகள் எடுத்தனர். அவர்கள் ரஷ்ய ராணுவ அதிகாரிகளை விலைக்கு வாங்கி னர். அவர்களுக்கு ஏராளமான ஆயுதங்க ளை தந்தனர்.

ரஷ்ய மக்களை லெனினுக்கு எதிராக கிளர்ந்தெழ பல முயற்சிகள் செய்தனர். அனைத்தும் தோல்வி அடைந் தன” சேலத்திலிருந்து வெளிவந்த தமிழ்நாடு எனும் பத்திரிகை 27.01.1924 அன்று கீழ்க் கண்ட அஞ்சலி செய்தியை வெளியிட்டது.  “இங்கிலாந்து/ பிரான்சு/ பெல்ஜியம்/ இத்தாலி/ ஜப்பான்/ அமெரிக்கா/ ஜெர்மனி ஆகிய முதலாளித்துவ தேசங்கள் அனைத்து திசைகளிலிருந்தும் போல்ஷ்விக் ரஷ்யா அரசாங்கத்தை அழிக்க எத்த னித்தன.  இது போதாதென்று இவர்கள் செக்கோஸ் லேவாகிய ராணுவத்துக்கு நிதி உதவி செய்து ரஷ்யாவை தாக்க செய்தனர்.

லெனின் அனைத்து தாக்குதல்களையும் சமாளித்தார். இறுதியில் வெற்றி பெற்று போல்ஷ்விக் அரசை நிறுவினார். அவரது அரசாங்கத்தை தாக்கியவர்கள் எல்லாம் பின்னர் அவருடன் வணிக ஒப்பந்தம் செய்து

கொள்ள முன்வந்தனர். லெனின் இறந்துவிட்டாலும் அவரது கொள்கைகள் என்றென்றும் உயிர்வாழும் என்பது நிச்சயம்” பாண்டிச்சேரியிலிருந்து வெளிவந்த  தேச சேவகன் எனும் பத்திரிகை  29.01.1924 இல் கூறியது:

“ஒரு தனித்துவமான மாறுபட்ட அரசாங்கத்தை நிறுவி அதனை 7 ஆண்டு கள் நிர்வகித்த அந்த மாமனிதர் இறந்து விட்டார். அவரை பலர் எள்ளி நகையாடினர். இன்னும் தொடர்ந்து இகழ்கின்றனர். ஆனால் அவர் நிறுவிய சித்தாந்தம் ஈடு இணையற்றது. அவரது கொள்கைகள் மேலும் உறுதியாக நிலைநாட்டப்படும் என நாம் நம்புகிறோம்” சங் பரிவாரத்தினரால் திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்டது.

அதற்கு எதிர்வினையாக தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக் குழு அலுவலகத்தில் பிரம்மாண்ட லெனின் சிலை நிறுவப்பட்டது. இந்தியாவை லெனின் நேசித்தார். அதே போல இந்திய மக்கள் லெனினை நேசித்தனர். சுரண்ட லற்ற இந்தியாவை படைக்க லெனின் என்றென்றும் வழிகாட்டியாக இருப்பார்.