tamilnadu

img

மிக்ஜம் புயல்: 6 துறைமுகங்களில் 3ஆம் எண் எச்சரிக்கை கூண்டு

சென்னை, டிச. 3- மிக்ஜம் புயல் உருவான தைத் தொடர்ந்து தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள துறை முகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜம் புய லாக வலுவடைந்தது. இது வடமேற்கு  திசையில் நகர்ந்து பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து 5ஆம் தேதி நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், மிக்ஜம் புயல் உருவா னதை தெரிவிக்கும் வகையில் 9 துறை முகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கட லூர், புதுச்சேரி துறைமுகங் களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டுள்ளது. நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட் டுள்ளது.

புதுச்சேரி கடல் பகுதி சீற்றமாக உள்ள தால் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப் பட்டனர். புயல் பாதிப்புகளில் இருந்து பொது மக்களை மீட்க 46 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் முகாமிட்டுள் ளனர். 211 தற்காலிக முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன.