வேலூர் ஊரிசு கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி
வேலூர் ஊரிசு கல்லூரி டிபோர் அரங்கில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் சொற்பொழிவாளரும் வழக்கறிஞருமான அ.அருள்மொழி கருத்துரை வழங்கினார். அவருக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.ரா.சுப்புலெட்சுமி நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அ.மலர், முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஸ்ரீதர், ஊரிசு கல்லூரி முதல்வர் ஆனிகமலா ப்ளாரன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.