சென்னை,பிப்.10- பிப்ரவரி 16 வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம் என்று சிஐடியு அறைகூவல் விடுத்துள்ளது.
இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) வின் மாநில நிர்வாக குழு கூட்டம் திருச்சியில் பிப்ரவரி 7, 8 ஆகிய தேதிகளில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடை பெற்றது. மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ்க்கா ணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விலைவாசி உயர்வு, வேலையின்மை குறைந்தபட்ச ஊதியம், பொதுத்துறை தனியார்மயம் கூடாது, கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை விரிவு படுத்த வேண்டும்.விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை கொடுக்க வேண்டும். புதிய மோட்டார் வாகனச்சட்டத்தை கைவிட வேண்டும். இந்திய தண்டனைச் சட்டத்தை மாற்றக் கூடாது. முறைசாரா தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேசம் தழுவிய வேலை நிறுத்தம் மறியல் மற்றும் கிராமப்புற பந்த் என அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் விவசாய, விவசாயத் தொழிலாளர் அமைப்பு களும் இணைந்து அறைகூவல் விடுத் துள்ளன.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தும் வேலை நிறுத் தத்தை வெற்றி பெறச் செய்வதோடு மறி யல் போராட்டத்தில் பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்கள் திரட்டி வலுவான முறையில் நடத்த வேண்டும் என மாநில நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது
ஓட்டுநர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெறுக!
1.1. 2024 அன்று ஒன்றிய அரசு 304 ஏ என்ற ஐபிசி சட்டத்திற்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா என அறிவித்து 106 (1-2) என்று புதிய சரத்துக்களை இணைத்து ஓட்டுநர்களை பாதிக்கின்ற வகையில் விபத்தை கிரிமினல் செயலாக கணக்கில் எடுத்து இருசக்கர வாகனம் முதல் மிகப்பெரிய லாரிகள் ஓட்டுபவர்கள் வரை எல்லா ஓட்டுநர்களையும் விபத்து மரணம் என்று வந்தால் ஐந்தாண்டு சிறை, விபத்து நடந்த இடத்தில் வாகனத்தில் அருகில் ஓட்டுநர் நிற்காமல் இருந்தால் 10 ஆண்டு சிறையும் ஏழு லட்ச ரூபாய் அபராதமும் என்று சட்டத்தை அமல்படுத்தி தற்பொழுது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும் ஒன்றிய அரசு இதனை திரும்பப் பெறவில்லை. இதனை திரும்பப் பெற வேண்டும்.
மின்வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது!
தமிழ்நாடு அரசு மின்வாரியம், மின்வாரியத்தை மூன்று பிரிவுகளாக, அதாவது உற்பத்தி என்றும் விநியோகம் என்றும் பசுமை மின்சாரம் என பிரித்து அரசாணை வழங்கி உள்ளது. இதனால் பொதுத்துறையில் நீடிக்கக்கூடிய மின்சார வாரியம் என்பது தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையாக இது அமையும். இலவச மின்சாரம், சலுகை மின்சாரம் என்பது அறவே இல்லாமல் போகும். மின்சாரத்தை சந்தை பொருளாக்குவதற்காக இது இட்டுச் செல்லும் .எனவே மக்களை பாதிக்கின்ற தமிழக அரசின் அரசாணை 6 மற்றும் 7 உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
மீனவர்களுக்கு சாதகமான தீர்ப்பை அமல்படுத்துக!
உள்நாட்டு மீனவர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசாணை எண் 332 - 1993 இன் படி மீன்பிடி குத்தகை வழங்கப்பட்டு வந்தது. அதனை எதிர்த்து சிலர் வழக்கு தொடுத்தனர். வழக்கில் உள்நாட்டு மீனவர்கள், கூட்டுறவு சங்கங்களுக்கு சாதகமான அதாவது உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்பிடிப்பு குத்தகையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று உள்ளது. அந்த தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தி மீனவர்கள் காக்க வேண்டும்.
ஒன்றிய பாஜக அரசு கடற்கரை உள்ளடக்கிய 14 மாநிலங்களில் கடலில் உள்ள கனிம வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்க அனுமதி வழங்கி உள்ளது. குறிப்பாக கன்னியா குமரி மாவட்டத்தில் மூன்று தொகுதி களுக்கான ஏலம் விடப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் அருகாமையில் உள்ள நெல்லை, தூத்துக் குடி, இராமநாதபுரம் போன்ற மாவட்டங் களிலும் மேற்கு கடற்கரையில் உள்ள கேரள மாநில கடலையும் பாதிப்புக் குள்ளாக்கும். ஆகவே ஒன்றிய அரசு அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உரிமைக் கொள்கையை உடனடி யாக திரும்ப பெற வேண்டும். ஏலத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அங்கன்வாடி திட்டத்திற்கான நிதியை குறைத்துள்ளதை உடனடியாக திரும்பப் பெற்று மேலும் அதிக நிதி ஒதுக்க வேண்டும். ஆயுஷ்மான் பாரத் என்ற இன்சூரன்ஸ் திட்டத்தை உடனடி யாக திரும்பப் பெற வேண்டும்.
70 லட்சம் தொழிலாளர்களின் ஆவணங்களை பதிவேற்றுக!
தமிழகத்தில் கட்டுமான மற்றும் உடலுழைப்பு நல வாரியத்தில் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் ஓய்வூதி யம், வீடு கேட்டு பதிவு செய்துள்ள சுமார் 70 லட்சம் தொழிலாளர்களின் ஆன்லைன் பதிவு தரவுகள் அனைத்தும் அழிந் துள்ளது. இப் பிரச்சனையில் தமிழக அரசு உரிய முறையில் விசாரணை நடத்தி தரவு களை மீட்டெடுக்க வேண்டும். உரிய முறை யில் ஆவணங்களை உடனடியாக கால தாமதமின்றி பதிவேற்றுவதற்கு அரசு முன் வர வேண்டும். நேரடி பதிவை துவக்கிட வேண்டும்.
அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் சிஐடியு பணி நிரத்தரம் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் 480 நாட்கள் பணி முடித்த நாளில் இருந்து பணி நிரந்தரம் செய்திட வேண்டுமென மதுரை தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்த தீர்ப்பை நிர்வா கம் உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேல் முறையீடு கூடாது,
தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றும் ஊழி யர்களுக்கு பிறதுறை பணிகளை சுமத்து வதை கைவிட வேண்டும். அரசின் திட்ட பணிகளை செய்யும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தனியார் மின் இணைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ‘எச்’ உரிமம் எவ்வித பிரச்சனை இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிமத்திற்கு அபரிமித மான கட்டணத்தை வசூல் செய்யக் கூடாது. விபத்து ஏற்பட்டு உடல் ஊனமோ உயிரிழப்போ ஏற்பட்டால் இழப்பீடு தொகையை அரசே வழங்க வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் அரசாணை மீது தோட்ட முதலாளிகள் உயர்நீதி மன்றத்தில் தடை பெற்றுள்ளனர். அத்த டையை தமிழக அரசு உடனடியாக நீக்கி தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றபட்டன.