tamilnadu

img

சிபிஐ வேட்பாளர் செல்வராஜூவை ஆதரித்து திருவாரூர் முழுவதும் சிபிஎம் வாக்குச் சேகரிப்பு

திருவாரூர், ஏப்.16 - இந்தியா கூட்டணி சார்பில் நாகை நாடாளு மன்றத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜுக்கு ஆதர வாக மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில் செவ்வாயன்று திரு வாரூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாக்குச் சேகரிப்பு நடை பெற்றது. நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவா ரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் ஆகியோர் தலைமையில், கட்சியினர் வீடு, வீடாகச் சென்று தேர்தல் பரப்புரை மேற்கொள்கின்றனர்.

திருவாரூர் தொகுதி தேர்தல் பணிக்குழு பொ றுப்பாளராக உள்ள சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.சேகர் தலைமையில், திருவாரூர் ஒன்றிய, நகரப் பகுதிகளிலும், திருத்துறைப் பூண்டி தேர்தல் பணிக் குழு பொறுப்பாளராக உள்ள சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு தலைமையில், திருத்துறைப் பூண்டி தெற்கு, வடக்கு, திருத்துறைப்பூண்டி நகரம், கோட்டூர், முத்துப்பேட்டை நகரம், ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிர வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது.

நன்னிலம் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரான சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன் தலைமையில், நன்னிலம் ஒன்றியம் பேரளம் நகரம் உள்ளிட்ட பகுதிகளிலும், மன் னார்குடி தேர்தல் பணிக் குழு பொறுப்பாளரான சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.தமிழ்மணி தலைமை யிலும் தீவிர வாக்குச் சேக ரிப்பு நடைபெற்றது.

மேலும் குடவாசல், வலங்கைமான், கொரடாச் சேரி, நீடாமங்கலம் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றியம், நகரப் பகுதிக ளில் உள்ள வீடுகளுக்கு நேர டியாக சென்று மக்களை சந்தி த்து துண்டு பிரசுரங்கள் வழங்கி, நாகை நாடாளு மன்ற வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜூக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் மிகப் பெரிய வெற்றியை வழங்கிட கோரி பிரச்சாரம் நடை பெற்றது. தேர்தல் பிரச்சாரத்தில், கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்கள் முதல் கிளை உறுப்பினர்கள் வரை தீவிர வாக்குச் சேகரிப் பில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும் சிஐடியு மாவட்டக் குழு சார்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன் னார்குடி உள்ளிட்ட நகரப் பகுதிகளிலும் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குச் சேக ரிக்கப்பட்டு வருகிறது.

;