ராணிப்பேட்டை மாவட்டத்தில் 288 ஊராட்சிகளுக்கு தலா 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 364 கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர். காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.எல். ஈஸ்வரப்பன் (ஆற்காடு), எ.எம். முனிரத்தினம் (சோளிங்கர்), கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா. ஜெயசுதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.