tamilnadu

img

மன்னிப்பு கேட்ட இயக்குநர் சுதா கொங்கரா!

ஜோதிராவ் புலே - சாவித்திரிபாய் புலே வரலாற்றை, சாவர்க்கரின் வரலாற்றாக பேட்டி ஒன்றில் சொன்னதற்கு, இயக்குநர் சுதா கோங்கராவுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்ததை அடுத்து, அவர் மன்னிப்பு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிராவ் மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.