சமூக ஊடகங்களுக்கு மாணவர்கள் அடிமையாக கூடாது: ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் அறிவுறுத்தல்
அம்பத்தூர், ஜூன் 6- சமூக ஊடகங்கள் மாண வர்களின் நேரத்தை வீணடிக் கும், அதற்கு அடிமையாகி விடக்கூடாது என ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பட்டாபிராமில் உள்ள இந்துக் கல்லூரியில் புதிதாக சேர்ந்துள்ள மாண வர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி வியாழனன்று (ஜூன் 5) நடைபெற்றது. இதில் ஆவடி மாநகரக் காவல் ஆணையர் கி.சங்கர் கலந்து கொண்டு பேசுகையில், ஒரு காலத்தில் கல்லூரிகளில் ராகிங் கொடுமை தீவிரமாக இருந்தது. புதிய மாணவர்களின் பலவீனத்தை சீனியர் மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். அதுவொரு இழிவான செயல். இன்று ராகிங் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். மாணவர்கள் பள்ளிகளை விட கல்லூரியில் ஒரு சுதந்திரத்தை உணர்வீர்கள். அந்த சுதந்திரத்தை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். நீங்கள் கடைபிடிக்கும் ஒழுக்கம் தான் உங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும். சமூக ஊடகங்கள் மாணவர்களின் நேரத்தை வீணடிக்கும். அதனால் நேர மேலாண்மை மிக முக்கியம். எனவே சமூக ஊடகங்களுக்கு நீங்கள் அடிமையாகிவிடக் கூடாது என்றார். மேலும் மாணவர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பது போதைப் பொருள் பழக்கம். போதைப் பொருட்களுக்கு இங்கே ஒரு தேவை இருக்கிறது. அதனால் தான் பிற மாநிலங்களில் இருந்து அது கடத்தி வரப்படுகிறது. அந்த தேவையை இல்லாமல் செய்வதில் மாணவர்களின் பங்கு முக்கியமானது. காவல்துறை போதைப்பொருள் கிடைப்பதை தடுப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அதே நேரம் அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த போதைப் பழக்கம் மன அழுத்தம், உடல்நிலை பாதிப்பு, நடத்தை மாற்றம், குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டு தல் உள்ளிட்ட பிரச்சினைகளை உரு வாக்கும். மாணவர்களிடையே உள்ள போதைப்பொருள் பழக்கத்தை கண்ட றிய கல்லூரிகள் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். அந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்பது அவசிய மானது. மாணவர்கள் பாதுகாப்பு இல்லாத இணைய தளங்களுக்கு செல்லக்கூடாது. கை பேசியில் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். கடன் செயலிகள் அதிக குற்றச்செயல்கள் நிகழ்வதற்கு காரணமாக இருக்கிறது. இணையவழிக் குற்றங்களில் பாதிக்கப்பட்டால் உடனே 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். பெண்கள் அனைவரும் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில கல்லூரி இயக்குநர் என்.ராஜேந்திர நாயுடு, ஆவடி காவல் மாவட்ட துணை ஆணையர் ஐமன் ஜமால் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.