சென்னை,நவ.16- சாலை விதிகளை மாணவர்கள் மற்றவர்க ளுக்கு சொல்லித்தரும் வகையில் தங்களும் அதை உறுதியாக கடைபிடிக்கவேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை துணை ஆணை யர் எஸ்.முத்துவேல் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் பாதுகாப்பான சாலை களுக்காக ஒருங்கிணைவு” என்ற சாலை விபத்து தடுப்பு செயல் திட்டத்திற்காக ஹேண்டி கேப் இன்டர்நேஷனல் மற்றும் பிஎஸ்ஏ பவுண்டேஷன் இடையே சென்னையில் ஒப்பந் தம் கையெழுத்தானது.சேத்துப்பட்டு கிறிஸ்துவ கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்கள் பேருந்து படிக்கட்டு களில் தொங்கி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார். இளம் வயதில் ஹீரோ போன்ற உணர்வு மனதில் தோன்றினாலும் சாலை விதிகளை மதிக்காமல் செல்லும் போது ஏற்படும் உயிரிழப்பால் ஒரு குடும்பமே பாதிக் கப்படும் என்றார். சாலை விதி குறித்த விழிப்பு ணர்வை காவல்துறை, திரை நட்சத்திரங்கள், முக்கிய பிரமுகர்கள் சொல்வதை காட்டிலும் மாணவர்கள் மற்றவர்களிடம் எடுத்துச்செல்வது தான் சிறந்தது என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சென்னையில் இரு பள்ளிகளிலிருந்து 1500 மாணவர்கள் கலந்து கொண்டனர். 2 லட்சம் சிறார்கள், வளர்இளம் பருவத்தினர், இள வயது நபர்களை இலக்கா கக் கொண்டு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் அதுகுறித்த லோகோ வெளி யிடப்பட்டது. ஹேண்டிகேப் இன்டர்நேஷனல் பிரான்ஸ்-ன் இயக்குனர் சேவியர் டூ க்ரெஸ்ட், தேசிய நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குநர் வாசு, பள்ளியின் முதல்வர் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.