tamilnadu

img

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்: தமிழக அரசு  

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.  

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 6 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதிவரை நடைபெறும். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.

முன்னதாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அரசால் வெளியிடப்பட்டுள்ளது.  

இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறையில் முகக்கவசம் அணிவதில் குழப்பம் இருப்பதால் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அந்த வகையில் தனிமனித இடைவெளியுடன் தேர்வு நடைபெற்றாலும் முகக்கவசம் அணிந்தே தேர்வு எழுத வேண்டும்.

மேலும் தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.   

;