tamilnadu

img

மாணவர்கள் கல்வியுடன் தனித் திறனையும் நற்பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்

சென்னை,ஆக2- உயர்கல்வி மேம்பாட்டுக்கு ஒன்றிய,மாநில அரசுகளுடன் தனி யார் நிறுவனங்களும் உரிய பங்க ளிப்பை செலுத்தவேண்டும் என்று தேசிய கல்வி தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர்அனில் டி.சஹஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழ கத்தின் 39ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை (ஆக.2) நடை பெற்றது. விழாவில், தேசிய கல்வி  தொழில்நுட்பக் கழகத்தின் (என்இடிஎஃப்)  தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். கர்நாடக மாநில வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் டி.ஆர்.பரசுராமன் கவுரவ விருந்தின ராக பங்கேற்று பேசினார்.

விழாவில், 8205 மாணவ, மாணவி களுக்கு இளநிலை, முதுநிலை பட்டங் களும், 357 பேருக்கு முனைவர் பட்ட மும், 65 மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கமும் அளிக்கப்பட்டன. விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனாபாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதிமல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் அனில் சஹஸ்ரபுத்தே பேசியதாவது:

‘’உயர் கல்விக்கு அரசு அதிகளவில் நிதி ஒதுக்க வேண்டும். அத்துடன், தனி யார் நிறுவனங்களும் அதற்கான பங்களிப்பை செலுத்திட வேண்டும். அவ்வாறு அரசும், தனியார் நிறுவன ங்களும் ஒருங்கிணைந்து செயலாற் றும்போது மட்டுமே உயர்கல்வி விகிதத்தை மேம்படுத்த முடியும். தற்போது தொழில் நிறுவனங்கள் கல்வி, தனித்திறன், நற்பண்புகள் ஆகிய மூன்றும் சமநிலையில் இருப்பதை எதிர்பார்க்கின்றன. எனவே, மாணவர்கள் கல்வியுடன் தனித்  திறனையும், நற்பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

வேந்தர் விசுவநாதன்

விஐடி வேந்தர் விசுவநாதன் தலைமை வகித்துப் பேசுகையில்,ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் அதற்கு கல்விதான் அடிப்படை. தேசிய கல்விக்கொள்கை இந்தியாவின் உயர்கல்வி விகிதம் 27 சதவீதத்தி லிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கிறது. அது சாத்தியமாக வேண்டுமென்றால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்கு செலவிட வேண்டும். ஆனால், இந்தியாவில் அதிகபட்சம் 3 விழுக்காடு மட்டுமே கல்விக்காக ஒதுக்கப்படுகிறது.   இதனால், கல்விக்கான நிதிச் சுமையை பெற்றோர்களே ஏற்க வேண்டியுள்ளது. இந்நிலையை  ஒன்றிய மாநில அரசுகள் மாற்ற வேண்டும் என்றார்.