tamilnadu

img

தண்ணீர் கேட்டு போராட்டம்.....

திருவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதி யில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  தாமிரபரணித் தண்ணீர்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி சார்பில் வழங்கப்படுகிறது.இந்நிலையில் நகரில் 10 நாள், 15 நாளுக்கு ஒருமுறை என்று இருந்த குடிநீர் விநியோகம் தற்போது மாதக்கணக்கில் ஆகிவிட்டது.  எனவே உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 33-வது வார்டு கிருஷ்ணன் கோவில் தெரு பெண்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு நகராட்சி  அலுவலகத்திற்கு வந்தனர்.குடிநீர் விநியோக பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள்  பெண்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது பெண்கள்,   தண்ணீருக்காக அவதிப்படுகிறோம். எங்கள் பகு திக்கு உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.