வேலூர், ஜூன் 19- வேலூர் அருகே பள்ளி மாணவி உயிரி ழப்புக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாண வியை 3 பேர் ஆபாச படம் எடுத்து மிரட்டிய தால் தீக்குளித்து இறந்தார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், குற்றவாளி களை கடுமையான சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கம் சார்பில் சி.எஸ்.மகாலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.டி.சங்கரி, வேலூர் வடக்கு, காட்பாடி கமிட்டி செயலாளர்கள் வி.நாகேந்திரன், கே.ஜெ.சீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.நர சிம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.