சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 9இல் நடைபெற உள்ள நாடு தழுவிய போராட்டத்தை விளக்கி அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இதில் அம்பத்தூர் பகுதி சிஐடியு செயலாளர் சு.லெனின்சுந்தர், விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி சி.சுந்தரராஜ், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் கே.ரவிச்சந்திரன், மேற்கு கிளைச்செயலாளர் தசரதன், பொருளாளர் கனேஷ்ராவ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கும்மிடிப்பூண்டி வழுதலம்பேடு கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணன் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.