சென்னை, ஆக. 26 - ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி ஆண்ட்ரூயூல் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். மத்திய அரசுக்கு சொந்த மான ஆண்ட்ரூயூல் அண்டு கம்பெனி லிட். என்ற பொதுத்துறை நிறுவனம் கந்தஞ்சாவடியில் செயல்படு கிறது. உயர் மின்னழுத்த மின் மாற்றிகளை (டிரான்ஸ்பார்மர்) தயா ரிக்கும் நிறுவனத்தில், 72 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இத்தொழிலாளர்க ளுக்கான டிரான்ஸ்ஃபார்மர் அண்டு சுவிட்ச் கியர் எம்பிளாயீஸ் யூனியனுடன் 1-4-2017 அன்று நிர்வாகம் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொட ங்கியது. கடந்த 28 மாத பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட வில்லை. இதனிடையே நிர்வாகம் பழிவாங்கும் போக்கில் ஈடுபட்டது. இந்நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி ஆக.19 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்ற னர். நிறுவன வாயிலில் அமர்ந்து தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு பிறகும் நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு முன்வர வில்லை. மத்திய தொழி லாளர் நலத்துறை ஆணைய மும் பிரச்சனையில் போதிய தலையீடு செய்யாமல் உள்ளது. எனவே, வேலை நிறுத்தத்தின் 8வது நாளான திங்களன்று (ஆக.26) தொழிலாளர்களின் குடும்பத்தினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் பேசிய தோழமை தொழிற்சங்கத் தலைவர்கள், நிர்வாகமும், மத்திய தொழிலாளர் நலத்துறையும் முறையாக தலையிட்டு பிரச்சனையை தீர்க்காவிடில் தொழில் அமைதி கெடும். ஆண்ட்ரூயூல் தொழிலாளர்களுக்கு ஆதர வாக தொழிற்சங்கங்கள் களம் இறங்கும் என்று எச்சரித்துள்ளனர்.